பார்டர்

பார்டர்

Friday 19 June 2015

பிரசுரிக்கப்பட்ட என்னுடைய கோலங்கள்-4


பார்டர் கோலம் ஏப்ரல் 2006



பெண்மணி அக்டோபர் 2001



பெண்மணி செப்டம்பர் 2003


மங்கையர் மலர் 1994




ராணி முத்து ஜனவர் 2002




பிரசுரிக்கப்பட்ட என்னுடைய கோலங்கள்-3


ஞான ஆலயம் 2001



ஞான ஆலயம் டிசம்பர் 2002



ஞான ஆலயம் பிப்ரவரி 2001




தினமலர் 1993



தேவி 1994



பிரசுரிக்கப்பட்ட என்னுடைய கோலங்கள்-2

குமுதம் சிநேகிதி டிசம்பர் 2004



குமுதம் சிநேகிதி மார்ச் 2004



குமுதம் சிநேகிதி ஏப்ரல் 2002



குமுதம் சிநேகிதி ஜூன் 2003



குமுதம் சிநேகிதி மார்ச் 2004



குமுதம் சிநேகிதி ஜூன் 2004


பிரசுரிக்கப்பட்ட என்னுடைய கோலங்கள்-1


குமுதம் சிநேகிதி ஜனவரி 15, 2005








வாரக் கோலங்கள்





கோலங்கள் பற்றிய சில குறிப்புகள்



1. வேதகாலத்தில் அங்குரார்ப்பணத்தின்போது முளைப் பாலிகை, பால், பால்குடம், விளக்கு இவற்றை வைக்க, தனித்தனி கட்டங்கள் வரைந்து அரிசி மாவு, மஞ்சள் பொடி நிரப்புவர். இதுவே காலப் போக்கில் கட்டக் கோலங்களாகி இருக்கலாம்.
2. அக்னி வளர்க்க ஒன்பது குழிகள் தோண்டிக் குண்டம் அமைப்பார்கள். அக்குழிகளை இணைக்கக் கோடு இட்டதே புள்ளிக் கோலம் ஒருவாகக் காரணம்.
3. தமிழ் மக்கள் பழங்காலத்தில் 'மணல் ஓவியம்' வரைந்ததாக பழைய நூல்கள் உரைக்கின்றன.
4. சில விசேஷமான கோலங்கள், விசேஷ பலன்களைத் தரும். நுனியில் சக்கரம் கொண்ட அறுமுக்கோண கோலத்தைப் போட்டால், துர் சக்திகள் வீட்டில் நுழையாது.
5. வெண்மையும், சிவப்பும் இணைந்த கோலம் சிவ - சக்தி ஐக்கியமாகக் குறிக்கப்படுகிறது.
6. சுவாமிக்கு முன்பாக கீழே கண்ட கோலங்கள் இட்டால் குபேர சம்பத்து, செல்வம் கிட்டும்.
            சங்கு - கூப்பிட்ட குரலுக்கு கைகொடுக்கும்.
            சக்கரம் - பகைமையை அழிக்கும்.
7. குழந்தை பிறந்தாலும், பெண்கள் பருவமடைந்தாலும் அதைத் தெரிவிக்கும் பொருட்டு, இரவானாலும் கோலமிடுவது வழக்கம்.
8. வடநாடுகளில் பெரும்பாலும் 'ரங்கோலி' என்ற வண்ணக் கோலங்களே போடப்படுகிறது. ஹோலி என்ற பெயருடைய முனிவரின் மனைவி தன் கணவர் இறந்ததும் அவரது உருவத்தைப் பல வண்ணப் பொடிகளால் வரைந்து, அதன் மீது 48 நாட்கள் படுத்து தன் உயிரை விடுகிறாள். ஹோலியின் நினைவாகப் பல வண்ணங்களில் போட்ட கோலம் ;ரங்கோலி' ஆயிற்று.
9. சூரியோதயத்திற்கு முன்னால் கோலமிடுவதால் செல்வம் பெருகும். இடப்புறமாக இழையை இழுக்கக் கூடாது. கோலத்தை நின்று கொண்டுதான் போட வேண்டும். கோலத்தை காலால் அழிக்கக் கூடாது.

10.          பொங்கலின் போது ரதம் போன்று கோலம் வரைந்து, நடுவில் சூரிய, சந்திரரை வரைந்து பூஜை செய்ய வேண்டும். கிழக்கு மேற்காக ரதம் வரைந்து, வடக்கு, தெற்கில் சூரிய சந்திரரை வரைய வேண்டும்.

கோலம் அழகு கோலம்




கோலம் என்பதற்கு அழகு என்று பொருள். சூரியன் உதிக்குமுன் எழுந்து பசுஞ்சாணத்தால் வாசல் தெளித்து கோலமிடுவது வீட்டிற்கு ஐஸ்வர்யம் சேர்க்கும். கோலம் போடுவதால் மனம் உற்சாகம் பெறும். உடலுக்கு நல்ல தேகப் பயிற்சி. தற்போதைய அவசர உலகத்தில் தினசரி கோலம் போடாவிட்டாலும், விசேஷங்கள், பண்டிகை நாட்களில் எந்தப் பெண்ணும் கோலம் போடத் தவறமாட்டாள்.

கோல இழைகளை வலப்புறமாக மட்டுமே இழுக்க வேண்டும். இடப்புறமாக இழுக்கக் கூடாது.

கோலத்தை காலால் அழிக்கக் கூடாது. குழந்தை பிறந்தவுடன், அது இரவாக இருந்தாலும் கோலம் போடலாம். விசேஷ நாட்களில் மாக்கோலமிட்டு காவி பூசுவது சிவ சக்தி ஐக்யத்தை உணர்த்தும். வெண்மை – சிவன், சிவப்பு – காவி – சக்தி.

எறும்பு முதலிய ஜீவங்களிடம் நாம் பரிவு காட்ட வேண்டுமென்பதை உணர்த்தவே அரிசி மாவினால் கோலம் போடுகிறோம். பின்னல், சுழிக் கோலங்கள் வாழ்க்கை சுகம், துக்கம் இரண்டும் இணைந்தது என்பதையும், சுழிகளைப் போல் துன்பம் வந்தாலும் திடமாக இருக்க வேண்டுமென்றும் உணர்த்துகின்றன.

கோலப் பொடிகளின் நிறங்கள் ஒவ்வொன்றும் ஒரு குணத்தை வெளிப்படுத்துகின்றன.

மஞ்சள் – மங்கலம்; பச்சை – அன்பு; ஆரஞ்சு – தியாகம்; வெள்ளை – தூய்மை; சிவப்பு – வீரம்.

படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவது (_____) லட்சுமி வருவதைத் தடுக்கும். வீட்டின் உள் நோக்கிப் போடுவது (|| || ||) தெய்வங்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்பதாகும்.


மார்கழி மாதம் விடியற்காலை காற்றில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் ஓசோன் வாயு கலந்திருப்பதால் விடிகாலை எழுந்து கோலம் போடுவது நல்லது. வீட்டின் விசேஷங்களுக்கும், அழகுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் கோலத்தை தினமும் முடியாவிட்டாலும் விசேஷ நாட்களில் மட்டுமாவது போட்டு லட்சுமி கடாட்சத்தைப் பெறுவோமாக.